Thursday, November 9, 2023

அப்போஸ்தலர் விசுவாசப் பிரமாணம்!

 

விசுவாச அறிக்கை!

வானத்தையும் பூமியையும் படைத்த  சர்வ வல்லமையுள்ள 

பிதாவாகிய தேவனை விசுவாசிக்கிறேன். 

அவருடைய ஒரே குமாரனாகிய நம்முடைய நாதர் 

இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறேன். 

அவர் பரிசுத்த ஆவியினாலே கன்னிமரியாளிடத்தில் 

உற்பவித்துப் பிறந்தார். 

பொந்தியு பிலாத்துவின் காலத்தில் பாடுபட்டு, சிலுவையில் 

அறையுண்டு, மரித்து அடக்கம் பண்ணப்பட்டு பாதாளத்தில் இறங்கினார்.

மூன்றாம் நாள் மரித்தோரிடத்திலிருந்து எழுந்தருளினார். 

பரமண்டலத்துக்கேறி சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய 

தேவனுடைய வலதுபாரிசத்திலே  வீற்றிருக்கிறார். 

அவ்விடத்திலிருந்து உயிருள்ளோரையும், மரித்தோரையும் 

நியாயந்தீர்க்க வருவார். 

பரிசுத்த ஆவியையும் விசுவாசிக்கிறேன். 

பொதுவாயிருக்கிற பரிசுத்த சபையும், பரிசுத்தவான்களுடைய 

ஐக்கியமும், பாவமன்னிப்பும், சரீரம் உயிர்த்தெழுதலும்,

நித்திய ஜீவனும் உண்டென்று விசுவாசிக்கிறேன், ஆமென்.      

  

No comments:

Post a Comment