561. என்னைத் தாங்குகிறவரே ஸ்தோத்திரம்
562. என்னை சுகமாய் தங்கப் பண்ணுகிறீர் ஸ்தோத்திரம்
563. எனக்கு ஆதரவாய் இருந்தவரே, இருக்கின்றவரே ஸ்தோத்திரம்
564. என் விளக்கை ஏற்றுகிறவரே ஸ்தோத்திரம்
565. என் இருளை வெளிச்சமாக்குகிறவரே ஸ்தோத்திரம்
566. என் செவியைத் திறந்தீரே ஸ்தோத்திரம்
567. என் விண்ணப்பத்தை கேட்டீரே ஸ்தோத்திரம்
568. என் அழுகையின் சத்தத்தை கேட்பவரே ஸ்தோத்திரம்
569. என் கண்ணீர் உம்முடைய துருத்தியில் அல்லவோ இருக்கிறது ஸ்தோத்திரம்
570. என் கண்களை கண்ணீருக்கு தப்புவித்தீரே ஸ்தோத்திரம்
571. என் கால்களை இடறல்களுக்கு தப்புவித்தீரே ஸ்தோத்திரம்
572. என் அடிகளை உறுதிப் படுத்தினீர் ஸ்தோத்திரம்
573. என் கால்களை வலைக்கு நீங்கலாக்கி விடுவிப்பவரே ஸ்தோத்திரம்
574. என் கால்களை மான் கால்களைப் போலாக்குபவரே ஸ்தோத்திரம்
575. என் கால்கள் வழுவாதப்படி நான் நடக்கிற வழியை அகலமாக்கினீரே ஸ்தோத்திரம்
576. என் வழியை செவ்வைப் படுத்துகிற தேவனே ஸ்தோத்திரம்
577. என்னை விசாலமான இடத்தில் கொண்டு வந்தவரே ஸ்தோத்திரம்
578. சத்துருக்களின் கையில் என்னை ஒப்புக்கொடாமல் என் பாதங்களை விசாலத்தில் நிறுத்தினீரே ஸ்தோத்திரம்
579. நெருக்கத்தில் இருந்த என்னை கேட்டருளி விசாலத்தில் வைத்தீரே ஸ்தோத்திரம்
580. எல்லா நெருக்கத்தையும் நீக்கி விடுவித்தீர் ஸ்தோத்திரம்
No comments:
Post a Comment