Saturday, November 25, 2023

தாழ்மையின் ஜெபம்!

 

தாழ்மையின் ஜெபம்!

இரக்கமுள்ள கர்த்தாவே, எங்கள் சுய நீதியை நம்பி, நாங்கள் 

உம்முடைய பந்தியில் சேர துணியாமல், தேவரீருடைய அளவற்ற 

இரக்கத்தையே நம்பிச் சேருகிறோம். உம்முடைய மேஜையின் கீழ் விழும் 

துணிக்கைகளையும் பொறுக்கிக் கொள்ள நாங்கள் பாத்திரர் 

அல்லர். ஆனாலும் தேவரீர் எப்பொழுதும் இரக்கஞ்செய்கிற 

இலட்சணமுடைய மாறாத ஆண்டவராயிருக்கிறீர். ஆகையால், 

கிருபையுள்ள கர்த்தாவே, உமது அருமையான குமாரனாகிய இயேசு 

கிறிஸ்துவின் விலைமதியாத சரீரத்தாலும் இரத்தத்தாலும், எங்கள் 

பாவமுள்ள சரீரமும் ஆத்துமாவும் சுத்தமாகி, எப்பொழுதும் நாங்கள் 

அவருக்குள்ளும், அவர் எங்களுக்குள்ளும் வாசமாயிருப்பதற்கு ஏற்ற 

விதமாய், அவருடைய சரீரத்தைப் புசித்து, அவருடைய இரத்தத்தைப்  

பானம் பண்ண எங்களுக்குக் கிருபை செய்தருளும், ஆமென்.       

No comments:

Post a Comment