பேராசையில் விளைந்த பெரும் வினை!
Karur human stampede was a tragedy due to human rights violation. நம் எல்லோருக்கும் பொன் முட்டையிடும் வாத்துக் கதை தெரியும். ஒரு குடியானவன் வளர்த்துவந்த வாத்து அவனுக்கு தினம் ஒரு பொன் முட்டையிட்டு அவன் வாழ்வாதாரத்துக்கு உதவியாக இருந்தது. ஆனால் பேராசை கொண்ட அந்த குடியானவன் பெரும் செல்வந்தனாக விரும்பி வாத்தை அறுத்து விட முதலுக்கே மோசம் வந்தது போல் நடிகராக வளர்ந்து அரசியல்வாதியாக பரிணாமிக்கத்துவங்கிய திருவாளர் விஜய் அவர்களின் வாழ்வில் அவர் நினைத்ததற்கு எதிராக அமைந்து விட்டது. தமிழக வெற்றிக் கழகத்தினர் கரூரில் கூட்டம் நடத்த எத்தனித்தப் போதே இதற்கு முன்னால் நடத்திய கூட்டங்களில் திரண்ட கூட்டத்தை குறிப்பால் கணித்து கரூர் கூட்டத்தை பல முனை கூட்டங்களாக குறைந்த பட்சம் 4 அல்லது 5 முக்கிய பகுதிகளாக கணித்து பிரித்து நடத்த முற்பட்டிருந்தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கும். இதற்கு வாய்ப்பு இல்லை காரணம் இவர்கள் கூட்டம் நடத்துவதே பெருமளவில் கூட்டம் சேர்த்து மாஸ் காட்டுவதே நோக்கமெனில் இதற்கு வாய்ப்பே இல்லை தான். சரி இதையும் மீறி தவெகவினர் செய்த பிழையும் அதனால் விளைந்த வினையும் என்ன வென்று பார்போம். ஒன்று அக் கட்சியின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்து அவர்கள் தொண்டர்களுக்குச் கொடுத்த அறிவிப்பு அதாவது கூட்டம் நடத்த தேர்வாகியுள்ள இடத்திற்கு திரு. விஜய் அவர்கள் பிற்பகல் 12. 30 மணி என்று செய்த அறிவிப்பாகும். இதனால் ரசிகர்கள் நேரப்பட சாப்பிட்டும் சாப்பிடாததுமாக வேலுச்சாமிபுறத்தில் குவியத் துவங்கி விட்டனர். ஆனால் அப்பகுதியில் குடிநீர், வெயிலுக்கு ஒதுங்க தோதான இடமோ, கழிப்பறை வசதியோ, உணவோ ஏதுமில்லாதப் போது சுமார் 7- 8 மணி நேரம் கால் கடுக்க நின்றால் என்னவாகும்? நல்ல திடகாத்திரமான வாலிபர்களுக்கே இச்சூழல் சாத்தியமில்லாதப்போது குழந்தைகள், சிறுபிள்ளைகள், பெண்களின் நிலையை எண்ணிப்பாருங்கள். ஆனால் இங்கே ஒரு விஷயம் எனக்குப் புரியவில்லை, அதாவது மின்விசிறி அமைத்துக் கொடுத்து, இருக்கைகள் கொடுத்து, குடிதண்ணீர் வசதி, கழிப்பறை வசதி எல்லாம் அமைத்துக் கொடுத்து அழைத்தால் யாரும் வருவதில்லை. ஆனால் இங்கு மட்டும் வெயில் உஷ்ணம் என்றும் பாராமல் கால் கடுக்க நின்றார்கள் என்றால் அது அவர்களுக்கே வெளிச்சம். இரண்டாவதாக, கூட்டம் கட்டுக் கடங்காமல் சாலையின் இரு புறமும் நிரம்பி வழிய கூட்டத்திற்குள் விஜய் அவர்களின் பிரச்சாரப்பேருந்து நுழைக்கப் பட்டிருக்கிறதே இது எப்படி? அவ்வாறு நுழையலாமா? அப்படி நுழைந்தால் என்னவெல்லாம் ஆகும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சிந்தித்திருக்க வேண்டும் அல்லது திருவாளர் விஜய் அவர்கள் யோசித்திருக்க வேண்டும். அதை செய்யாமல் நான் தவறேதும் செய்யவில்லை என்று சொல்லுவது எப்படி? இத்துணை பெரிய மனித உரிமை மீறல் நடந்திருக்க மனித உரிமைகள் ஆணையம் இந்த விவகாரத்தில் விசாரணையை ஆரம்பிக்காமல் பொறுப்பை தட்டிக்கழித்து நியாயமா? என்று நாம் அனைவரும் சிந்துத்துப் பார்க்கவேண்டும். ஆனால் இத்தனை கோரத்திற்குப் பிறகும் விஜய் அவர்களின் பின்னால் நிற்க அழைப்புக் கொடுக்க துணியும் நபர்களை நாம் என்ன வென்று சொல்ல... குறைந்தப் பட்ச மனித நேயம் உள்ளவர்கள் எவரும் அவ்வாறு செய்யவே மாட்டார்கள். நல் வாய்ப்பாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சிகிச்சை முற்றுப் பெற்று அவர்தம் வீடுகள் திரும்பியிருக்கிறார்கள். அவ்வாறே மற்றவர்களும் நலமுடன் தங்கள் வீடுகள் திரும்ப பிரார்த்திப்போம். நன்றி, வணக்கம்
Evg.Babu T Thomas, Our Shepherd's Voice Foundation,
Ranipet - 632 401, Tamil Nadu.

No comments:
Post a Comment