Wednesday, October 22, 2025

Train your followers!

 Dear Mr. Vijai, Actor turned Politician,


ஒரு நடிகராக தனது வாழ்க்கையை துவங்கி புகழின் உச்சியில் இருக்கும் பிரபல நடிகராக தனது நிலையை தக்க வைத்துக் கொண்டு அரசியலில் அடியெடுத்து வைத்திருக்கும் எங்கள் அன்புக்குரிய விஜய் அவர்களுக்கு வணக்கமும், வாழ்த்துக்களும் பல. சகோதரர் விஜய் அவர்களே, உங்கள் பிரபலத்தன்மையின் நிமித்தம் மிகப் பெரிய கூட்டம் உங்கள் பின்னால் இருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து எவருக்கும் இருக்க முடியாது என்பது உண்மையே. எனினும் இந்த கூட்டத்தை முதலீடாகக் கொண்டு அரசியல் பிரவேசம் செய்து விடலாம் என்று நீங்கள் நினைப்பதில் தவறேதும் இல்லை. ஆனால் உங்களை கண்முடித்தனமாக நம்பும் இந்த பாமர மக்களுக்கு முதலில் செய்ய வேண்டியது என்ன என்று நீங்கள் சிந்திக்க வேண்டாமா? இங்கே ஒரு வரலாற்று உண்மையை நினைவுப் படுத்த விரும்புகிறேன். சற்றேரக் குறைய நன்கு நூற்றாண்டுகளுக்கு முன்னால் இன்றைய இங்கிலாந்து நாட்டில் தொழில் புரட்சியின் ஆரம்ப காலகட்டத்தில் சுமார் 75 % மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழிருந்து சொற்ப வருமானத்தில் தங்கள் வாழ்க்கையை ஒட்டிக்கொண்டிருந்தார்கள். இந்த ஜனக்கூட்டத்தில் வெளிநாடுகளிலிருந்தும் பிழைப்புத் தேடி பலர் வந்து கஷ்ட ஜீவியம் மேற்கொண்டு வாழ்க்கையை நடத்தி வந்தார்கள். இவர்களின் பிள்ளைகளோ தறிக்கெட்டு கட்டுக்கு அடங்காமல் தங்களுக்குத் தோன்றியதை நலமென்று நம்பி வளர்ந்து வந்தார்கள். இதை கண்ணுற்ற பத்திரிகையாளர் Robert Raixs என்பவரும் அவரது நண்பருமான Thomas Stalk என்பவரும் இணைந்து அரும் பாடுகள் பல பட்டு ஒழுங்கு, ஒழுக்கம், நற்பண்பு போன்ற நல்லொழுக்க நெறிகளை போதிக்கத்துவங்கி சுமார் 50 ஆண்டுகளில் வெற்றியும் கண்டார்கள். நாம் பெரும்பாலும் எல்லா வெள்ளைக்காரர்களையும் துரைகள் என்று சொல்லுவதில்லை இங்கிலாந்து நாட்டவர்களைத் தவிர காரணம் அவர்களின் நேரம் தவறாமை, சொல்லிலும் செயலிலும் நேர்மை, ஒழுக்கம் போன்ற காரணங்களே அடிப்படையாகும். இதற்கு மூலக் காரணமாக அமைந்தது Robert Raixs மற்றும் Thomas Stalk இணைத்து நடத்திய 7125 பயிற்சிப்பட்டறைகள் என்பதும் இவர்களில் 4 பேரில் 3 பேர் இவர்களின் பயிற்சிப் பட்டறையில் பயின்று வளர்ந்தவர்கள் என்பது வரலாற்று உண்மையாகும். இதனால் நடத்துனர் இல்லாத பேருந்துகள், மால்களில் தாங்களாகவே முன்வந்து உரிய பயணம் செலுத்தி தங்கள் நேர்மையை பறைசாற்றி வந்தனர்.
எனவே தாங்களும் இத்துப்போன்ற முயற்சியை மேற்க்கொண்டால் ஒரு சமுதாய மறுமலர்ச்சிக்கு வித்திட முடியும் என்று ஆழமாக நம்புகிறோம். கரூர் தள்ளு முள்ளில் தங்கள் இன்னுயிரை இழந்தவர்களும், மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருப்பவர்கள் என்பது வரலாற்றில் ஒருக்காலும் அழிக்க முடியாத கரும் புள்ளியாகும். இதற்காக அடுத்தவர் மீது பழியை சுமத்தி தப்பிக்கப் பார்ப்பது பேடித்தனமாகும். நடந்தது நடந்தது தான், அந்த வடுவை மேலும் ரணமாக்காமல், இதன் மூலம் பாடங்களை கற்றுக்கொண்டு ஆக்கப்பூர்வமாக சிந்தித்து செயல் பட்டு வெல்வது தான் முதிர்ச்சி.
நன்றி, வணக்கம்.
Evg.Babu T Thomas, Our Shepherd's Voice Foundation, Ranipet - 632 401. https://ourshepherdsvoicefoundation,blogspot.com

No comments:

Post a Comment