Tuesday, October 17, 2023

ஸ்தோத்திர பலிகள் ஆயிரம்! 281 - 300

 281. எங்களுடைய பாவங்களை சிலுவையின் மேல் சுமந்தவரே ஸ்தோத்திரம்

282. எம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு நோய்களை சுமந்தீரே ஸ்தோத்திரம் 

283. எம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு துக்கங்களை சுமந்தீரே ஸ்தோத்திரம் 

284. எங்களுக்காய் இரத்தம் சிந்தினீரே ஸ்தோத்திரம் 

285. எங்களுக்கு சமாதானத்தை உண்டுப்பண்ணும் ஆக்கினையை நீர் ஏற்றீரே ஸ்தோத்திரம் 

286. எம் ஒவ்வொருவருக்காய் மரணத்தை ருசிப் பார்த்தீரே ஸ்தோத்திரம் 

287. எங்களுக்காக பரிகசிக்கப் பட்டீரே ஸ்தோத்திரம் 

288. மனுஷரால் நிந்திக்கப் பட்டீரே ஸ்தோத்திரம் 

289. ஜனங்களால் அவமதிக்கப் பட்டீரே ஸ்தோத்திரம் 

290. அக்கிரமக் காரரில் ஒருவராக எண்ணப்பட்டீரே ஸ்தோத்திரம்

291. அக்கிரமக் காரராகிய எங்களுக்காக வேண்டிக் கொண்டீரே ஸ்தோத்திரம் 

292. உம்முடைய குணமாக்கும் தழும்புகளுக்காக ஸ்தோத்திரம் 

293. உயிர்த்தெழுந்தவரே ஸ்தோத்திரம் 

294. உயிர்த்தெழுதலும் ஜீவனுமானவரே ஸ்தோத்திரம் 

295. முதற் பேறானவரே ஸ்தோத்திரம் 

296. முதற் பலனானவரே ஸ்தோத்திரம் 

297. நானே வாசல் என்றவரே ஸ்தோத்திரம்

298.  மரணத்தை வென்றவரே ஸ்தோத்திரம் 

299. பாதாளத்தை வென்றவரே ஸ்தோத்திரம் 

300. மரணத்திற்கும் பாதாளத்திற்கும் உரிய திறவுக் கோலை உடையவரே ஸ்தோத்திரம்  

   

No comments:

Post a Comment