901. பிதாக்களுடைய அக்கிரமத்தை பிள்ளைகளின் மடியில் சரிக்கட்டுகிறவரே ஸ்தோத்திரம்
902. சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிச் செய்ய வல்லவரே ஸ்தோத்திரம்
903. முற்றுமுடிய இரட்சிக்க வல்லவரே ஸ்தோத்திரம்
904. வழுவாதப்படி எங்களைக் காக்க வல்லவரே ஸ்தோத்திரம்
905. தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே எங்களை மாசற்றவர்களாக நிறுத்த வல்லவரே ஸ்தோத்திரம்
906. உமது சமுகத்தின் இரட்சிப்பின் நிமித்தம் உமக்கு ஸ்தோத்திரம்
907. எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே, முடித்தவரே ஸ்தோத்திரம்
908. மரணப் பரியந்தம் எம்மை நடத்துகிறவரே ஸ்தோத்திரம்
909. நீர் சொல்ல ஆகும், நீர் கட்டளையிட நிற்கும், ஆகவே உமக்கு ஸ்தோத்திரம்
910. வானத்தையும் பூமியையும் உண்டாக்கினவரே ஸ்தோத்திரம்
911. வெளிச்சத்தை உண்டாக்கினவரே ஸ்தோத்திரம்
912. ஆகாயவிரிவையும், சமுத்திரத்தையும், உப்பையும் உண்டாக்கினவரே ஸ்தோத்திரம்
913. பூக்கள், கனிகள், காய்கள், கிழங்குகள், கீரைகள் இவைகளை கொடுக்கும் மரம், செடி, கொடிகள், புல், பூண்டுகளுக்காய் ஸ்தோத்திரம்
914. சூரிய, சந்திர, நட்சத்திரங்களுக்காய் ஸ்தோத்திரம்
915. நீர் வாழும் மிருகங்கள், மீன்களுக்காய் ஸ்தோத்திரம்
916. பறவைகள், வீட்டு மிருகங்கள், காட்டு மிருகங்கள், ஊரும் பிராணிகளுக்காக ஸ்தோத்திரம்
917. மண்ணினாலே மனிதனை உருவாக்கி, ஜீவ சுவாசத்தைக் கொடுத்து, ஏற்ற துணையையும் கொடுத்தீரே ஸ்தோத்திரம்
918. திட்டம் பண்ணின காலங்களுக்காக, மழைக்காக, பனிக்காக, வெயிலுக்காக, நீருற்றுக்காக ஸ்தோத்திரம்
919. ஆறுகளுக்காக, ஓடைகளுக்காக, எரிகளுக்காக, குளங்களுக்காக, நீர்விழுச்சிகளுக்காக ஸ்தோத்திரம்
920. மலைகளுக்காக, குன்றுகளுக்காக, மேடுகளுக்காக, பள்ளத்தாக்குகளுக்காக, சமபூமிகளுக்காக, பாலைவனங்களுக்காக, பனிப்பிரதேசங்களுக்காக ஸ்தோத்திரம்
No comments:
Post a Comment