Saturday, November 25, 2023

கர்த்தரே தேவன் என்று அறிய மறுக்கும் உலகம்!


 

தாழ்மையின் ஜெபம்!

 

தாழ்மையின் ஜெபம்!

இரக்கமுள்ள கர்த்தாவே, எங்கள் சுய நீதியை நம்பி, நாங்கள் 

உம்முடைய பந்தியில் சேர துணியாமல், தேவரீருடைய அளவற்ற 

இரக்கத்தையே நம்பிச் சேருகிறோம். உம்முடைய மேஜையின் கீழ் விழும் 

துணிக்கைகளையும் பொறுக்கிக் கொள்ள நாங்கள் பாத்திரர் 

அல்லர். ஆனாலும் தேவரீர் எப்பொழுதும் இரக்கஞ்செய்கிற 

இலட்சணமுடைய மாறாத ஆண்டவராயிருக்கிறீர். ஆகையால், 

கிருபையுள்ள கர்த்தாவே, உமது அருமையான குமாரனாகிய இயேசு 

கிறிஸ்துவின் விலைமதியாத சரீரத்தாலும் இரத்தத்தாலும், எங்கள் 

பாவமுள்ள சரீரமும் ஆத்துமாவும் சுத்தமாகி, எப்பொழுதும் நாங்கள் 

அவருக்குள்ளும், அவர் எங்களுக்குள்ளும் வாசமாயிருப்பதற்கு ஏற்ற 

விதமாய், அவருடைய சரீரத்தைப் புசித்து, அவருடைய இரத்தத்தைப்  

பானம் பண்ண எங்களுக்குக் கிருபை செய்தருளும், ஆமென்.       

முதலாம் சங்கீதம் சொல்லும் செய்தி!


 முதலாம் சங்கீதம் - சுவி. பாபு T தாமஸ்

1.துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,
2. கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
3. அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.
4. துன்மார்க்கரோ அப்படியிராமல், காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள்.
5. ஆகையால் துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை.
6. கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கரின் வழியோ அழியும்.

சங்கீதம் முதலாம் அதிகாரம் நமக்கு மூன்று முத்தான கருத்துக்களை தெரிவிக்கிறது. 1. செயத்தக்கவை 2. செய்யத்தகாதவை 3. இவ் இரண்டிற்குமான பாலா பலன்கள். இந்த உண்மையை தான் முதலாம் அதிகாரம் நமக்கு தெளிவு படுத்துகிறது. மனிதர்களாகிய நாம் நம் வாழக்கையில் கடைப்பிடித்து நடக்க வேண்டிய முறைமைகளை தெரிவிப்பது சங்கீதம் முதலாம் அதிகாரத்தின் நோக்கம். ஆகவே தான் சங்கீதம் முதலாம் அதிகாரம் நமக்கு செயத்தக்கவை எவை மற்றும் செயத்தகாதவை எவை என்று கூறுகிறது. அதோடு நில்லாமல் அவ்வாறு செய்வதால் வரும் பலன்களையும் இந்த அதிகாரம் நமக்கு வெளிப்படுத்துவது மற்றுமொரு சிறப்பு. சரி இப்போது முதல் வசனத்தை கவனிப்போம். முதல் வசனம் செய்யத் தகாதவை எவை என்று நமக்கு தெரிவிக்கிறது. வசனம் தெரிவிப்பது என்ன வென்றால் துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், என்று கூறுவதை நாம் பார்க்கிறோம். இங்கே ஒரு கேள்வி துன்மார்க்கர் யார்? பாவி என்பவர் யார்? பரியாசக்காரர் என்பவர் யார்? என்று நமக்குத் தெரியுமா? என்பது தான் அது. அது மாத்திரமல்ல நாம் ஒருவரையும் குற்றவாளியாக கருதுவதும், அனுமானிப்பதும் தவறு என்று பரிசுத்த வேதாகமம் நமக்கு போதிக்கிறது. நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும். மத்தேயு : 7 : 1 - 2.
இது இப்படி இருக்க ஒருவர் துன்மார்க்கர் யார் என்று தெரிந்தால் தான் நாம் அவர் ஆலோசனையை கேட்காமல் நடக்க முடியும். ஒருவர் பாவி என்று தெரிந்தால் தான் நாம் அவர் வழியில் போகாமலும, நில்லாமலும் இருக்க முடியும். அதே போல பாரியாசக்காரர் யார் என்று தெரிந்தால் தான் நாம் அவரோடு உறவாடாமல் இருக்க முடியும். அப்படியானால் இவர்களை நாம் எப்படி அடையாளம் காண்பது என்பது முக்கியம். இதை கர்த்தர் தான் நமக்கு வெளிப்படுத்த வேண்டும். மாயையைப் பேசும் வாயும், கள்ளத்தனமான வலதுகையும் உடைய அந்நிய புத்திரரின் கைக்கு என்னை விலக்கித் தப்புவியும். சங்கீதம் : 144 : 11. இதற்கு நமக்கு தேவை கர்த்தர் மீதான நமது நம்பிக்கை மற்றும் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும் வழிமுறையாகும். கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான். எரேமியா : 17 : 7. கர்த்தர் மீதான நமது நம்பிக்கையின் பெருக்கம் தான் நமக்கு உணர்வுள்ள ஆவியை பெற்றுத் தரும். கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற யாவருக்கும் நற்புத்தியுண்டு; அவர் புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும். சங்கீதம் : 111 : 10. ஒரு அழகான சம்பவம் பரிசுத்த வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. தேவனாகிய கர்த்தர் சாலமோன் ராஜாவுக்கு கனவில் தரிசனமாகி உனக்கு என்ன வேண்டும் கேள் என்கிறார். சாலமோன் ராஜா கர்த்தரிடத்தில் தனக்கு ஞானமுள்ள இருதயம் வேண்டும் என்று கேட்டான் என்று தெரிவிக்கிறது. கிபியோனிலே கர்த்தர் சாலொமோனுக்கு இராத்திரியில் சொப்பனத்திலே தரிசனமாகி: நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்று தேவன் சொன்னார். அதற்குச் சாலொமோன்: என் தகப்பனாகிய தாவீது என்னும் உமது அடியான் உம்மைப்பற்றி உண்மையும் நீதியும் மன நேர்மையுமாய் உமக்கு முன்பாக நடந்தபடியே தேவரீர் அவருக்குப் பெரிய கிருபைசெய்து, அந்தப் பெரிய கிருபையை அவருக்குக் காத்து, இந்நாளில் இருக்கிறபடியே அவருடைய சிங்காசனத்தில் வீற்றிருக்கிற ஒரு குமாரனை அவருக்குத் தந்தீர்.
இப்போதும் என் தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் உமது அடியேனை என் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத்திலே ராஜாவாக்கினீரே, நானோவென்றால் போக்கு வரவு அறியாத சிறுபிள்ளையாயிருக்கிறேன். நீர் தெரிந்துகொண்டதும் ஏராளத்தினால் எண்ணிக்கைக்கு அடங்காததும் இலக்கத்திற்கு உட்படாததுமான திரளான ஜனங்களாகிய உமது ஜனத்தின் நடுவில் அடியேன் இருக்கிறேன். ஆகையால் உமது ஜனங்களை நியாயம் விசாரிக்கவும், நன்மை தீமை இன்னதென்று வகையறுக்கவும், அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும்; ஏராளமாயிருக்கிற இந்த உமது ஜனங்களை நியாயம் விசாரிக்க யாராலே ஆகும் என்றான். சாலொமோன் இந்தக் காரியத்தைக் கேட்டது ஆண்டவருடைய பார்வைக்கு உகந்த விண்ணப்பமாயிருந்தது. ஆகையினால் தேவன் அவனை நோக்கி: நீ உனக்கு நீடித்த நாட்களைக் கேளாமலும், ஐசுவரியத்தைக் கேளாமலும், உன் சத்துருக்களின் பிராணனைக் கேளாமலும், நீ இந்தக் காரியத்தையே கேட்டு, நியாயம் விசாரிக்கிறதற்கு ஏற்ற ஞானத்தை உனக்கு வேண்டிக்கொண்டபடியினால், உன் வார்த்தைகளின்படி செய்தேன்; ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்; இதிலே உனக்குச் சரியானவன் உனக்குமுன் இருந்ததுமில்லை, உனக்குச் சரியானவன் உனக்குப்பின் எழும்புவதுமில்லை. இதுவுமன்றி, நீ கேளாத ஐசுவரியத்தையும் மகிமையையும் உனக்குத் தந்தேன்; உன் நாட்களில் இருக்கிற ராஜாக்களில் ஒருவனும் உனக்குச் சரியானவன் இருப்பதில்லை. உன் தகப்பனாகிய தாவீது நடந்தது போல, நீயும் என் கட்டளைகளையும் என் நியமங்களையும் கைக்கொண்டு, என் வழிகளில் நடப்பாயாகில், உன் நாட்களையும் நீடித்திருக்கப்பண்ணுவேன் என்றார். I இராஜாக்கள் : 3 : 5 - 14. சாலமோன் கர்த்தரிடத்தில் ஐசுவரியத்தையோ, நீண்ட ஆயுளையோ, சத்துருக்களின் பிராணனையோ கேளாமல் உணர்வுள்ள இருதயம் வேண்டும் என்று கேட்டு பெற்றுக்கொண்டான் என்று பார்க்கிறோம். ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார். ஏசாயா : 11 : 2. இதுவே நன்மை இன்னதென்றும் தீமை இன்னதென்றும் அறிந்து உணர்வதற்கான வழிமுறையாகும். இதையே நாமும் கர்த்தரிடத்தில் கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டும்.

இரண்டாவது செயத்தக்கவை, இதற்கு பதில் இரண்டாவது வசனத்தில் காணப்படுகிறது. கர்த்தருடைய வேதத்தில் பிரியமாய் இருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாய் இருப்பதே செயத்தக்கவையாகும். உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள் முழுதும் அது என் தியானம். நீர் உம்முடைய கற்பனைகளைக்கொண்டு என்னை என் சத்துருக்களிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிறீர்; அவைகள் என்றைக்கும் என்னுடனே இருக்கிறது. சங்கீதம் : 119 : 97 - 98. ஏனென்று சொன்னால், உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் : 119 : 105. அப்பொழுது, அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான். எரேமியா : 17 : 8. இது எதை குறிக்கிறது என்று சொன்னால், உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை. சங்கீதம் : 119 : 165. என்பதை நமக்கு மெய்பிக்கிற உணர்வை தருகிறதாக இருக்கிறது. இது எப்படி சாத்தியம் என்று சொன்னால், அதற்குகான விளக்கத்தையும் பரிசுத்த வேதாகமம் நமக்கு வெளிப்படுத்துவதை நாம் காணலாம். உம்முடைய வசனம் சமூலமும் சத்தியம், உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம். சங்கீதம் : 119 : 160. ஆக பரிசுத்த வேதாகமம் முழுவதும் சத்தியமாக இருக்கிறது, சத்தியத்தை மட்டுமே அது நமக்கு போதிக்கிறது. சத்தியம் அறிவையும, தெளிவையும் நமக்கு தருகிறது. ஆகவே வழியில் இடறல் என்பது அறவே இல்லை. சத்தியம் தான் நமக்கு மெய் ஞானத்தை தருகிறது. எனவே சத்தியதின் மீது கவனம் வைத்து செயல் படும் போது நாம் கலங்கத் தேவை இல்லை. வசனம் சொல்லுகிறது. கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். சங்கீதம் : 1 : 2. பாக்கிய வான்கள் என்றால் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள் என்று பொருள்.
மூன்றாவது பலன்கள் : அப்பொழுது எங்கள் குமாரர் இளமையில் ஓங்கிவளருகிற விருட்சக்கன்றுகளைப்போலவும், எங்கள் குமாரத்திகள் சித்திரந்தீர்ந்த அரமனை மூலைக்கற்களைப்போலவும் இருப்பார்கள். எங்கள் களஞ்சியங்கள் சகலவித வஸ்துக்களையும் கொடுக்கத்தக்கதாய் நிரம்பியிருக்கும்; எங்கள் கிராமங்களில் எங்கள் ஆடுகள் ஆயிரம் பதினாயிரமாய்ப் பலுகும். எங்கள் எருதுகள் பலத்தவைகளாயிருக்கும்; சத்துரு உட்புகுதலும் குடியோடிப்போகுதலும் இராது; எங்கள் வீதிகளில் கூக்குரலும் உண்டாகாது. இவ்விதமான சீரைப்பெற்ற ஜனம் பாக்கியமுள்ளது; கர்த்தரைத் தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் பாக்கியமுள்ளது. சங்கீதம் : 144 : 12 - 15. அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும். சங்கீதம் : 1 : 3. எனவே செய்யத் தக்கவைகளை அறிந்து நடப்பவர்கள் நல்ல நீரோட்டதில் நாட்டப்பட்ட விருட்சத்தை போலவும், அதினதின் காலத்தில் தன் கனிகளை கொடுக்கவும், இலையுதீராமல் எப்பொழுதும் செழிப்பாக இருப்பது போலவும, தான் கையிட்டு செய்யும் எல்லா காரியங்களும் வாய்க்கும் என்றும் பரிசுத்த வேதாகமம் நமக்கு சொல்லுகிறது. ஆகவே சங்கீதம் முதலாம் அதிகாரம் நமக்கு சொல்லும் உண்மையை புரிந்துக்கொண்டு, செயத்தக்கவை இன்னது என்று அறிந்து நாம் நடப்போமானால் பாக்கியவான்களாய் இருப்போம். ஆமென்.
பின் குறிப்பு : பொதுவாக பெருபாலான குடும்பங்களில் குடும்ப ஜெபம் என்பது அறவே இல்லாத சூழல் நிலவுவதையும், பல காரணங்களுக்காக தடை பட்டிருப்பதையும் அறிந்திருப்போம். ஆலயத்திற்கு செல்லுவது, அனுதினமும் குடும்ப ஜெபம் செய்வது, பரிசுத்த வேதாகமத்தை தியானிப்பதை வழக்கமாக கொண்டிருப்பது போன்ற காரியங்கள் குடும்பங்களில் நடைபெறாமல் இருக்க சத்துருவானவன் கங்கணம் கட்டிக்கொண்டு பல்வேறு வகைகளில் நமக்கு இடையூறு பண்ணிக்கொண்டிருக்கிறான். இதை உணராமல் நாமும் அதின் போக்கில் செயல் பட்டு நமது ஆசீர்வாதங்களை இழந்துக்கொண்டிருக்கிறோம் என்று உணர்ந்து செயல் பட வேண்டும். முயன்றால் முடியாதது ஏதுமில்லை. ஆகவே விடாப்பிடியாய் முயற்சிக்கும் போது வெற்றி நிச்சயம், வாழ்த்துக்கள் - கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பங்களையும் ஆசீர்வதிப்பாராக, ஆமென்.
சுவி. பாபு T தாமஸ், நமது மேய்ப்பரின் குரல் ஊழியங்கள், மதுரை - 625 107.
May be a doodle of text that says 'DO's DON'TS'
All reactions:
Vijayakumari Geetha

Tuesday, November 14, 2023

End days!


 

Plans of Isaac!


 

WW3


 

Neutral Nations!


 

Wonderful God - அதிசயமானவர் - Evg.Babu T Thomas,Our Shepherd's Voice Fou...

Anointing - அபிஷேகம் - Evg.Babu T Thomas, Our Shepherd's Voice Foundatio...

Make Disciple - சீஷனாக்கு - Evg.Babu T Thomas, Our Shepherd's Voice Foun...

தண்ணீருக்கு அக்கப்போர்!


 

Corruption Free is our aim!


 

The least are Blessed!


 

Myths vs Facts!


 

Blame Game!


 

Holy Bible!


 

Kings in the Bible!


 

Towards Light!


 

Ask to know more!


 

Think!


 

Simplicity is Godly nature!


 

Children's Day!

 


Monday, November 13, 2023

Greatest is Love - அன்பே பிரதானம் - Evg.Babu T Thomas, Our Shepherd's Vo...

ஜாதிப் பெருமைகள் சாவது எப்போது? சுவி.பாபு T தாமஸ்

 

ஜாதிப் பெருமைகள் ஒழிவது எப்போது? சுவி.பாபு T தாமஸ் 


மனிதருக்குள் ஜாதி பாகுபாடு என்பது குறிப்பாக இந்தியாவில் மிக அதிகம், அதே போல் ஜாதி பாகுபாட்டால் ஏற்படும் பாதிப்பும் இங்கு அதிகமே. வேற்றுமையில் ஒற்றுமை காண்கின்றோம் என்று சொல்லிக்கொண்டு ஜாதி பார்ப்பது, ஜாதிய அடக்குமுறைகள், வேற்றுமைகள் என்பது போன்ற கொடுமைகள் எல்லா நிலைகளிலும் தங்கு தடையின்றி காணப்படும்  அவல நிலை தொடர்ந்துக்கொண்டு தான் இருக்கிறது. எனினும் இதை களையவேண்டும் என்று கொள்கை ரீதியாக பலர் ஒப்புக்கொள்ளத் தான் செய்கிறார்கள். ஆனால் மனதளவில் அல்லது அதை செயல்படுத்தும் போக்கில் மட்டும் நடைமுறை சாத்தியம் என்பது  மிகக் குறைவு என்றெ நினைக்கத் தோன்றுகிறது. இன்னமும் ஜாதிக் கொடுமைகள், பாகுபாடுகள் பல இடங்களில் இயல்பாக நடந்த வண்ணம் தான் இருக்கிறது. அதனால் பல சமூகங்கள், குடும்பங்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதோடு, மனித இழப்புக்களும் நிறையவே நடந்த வண்ணம் இருக்கிறது, என்றாலும் மாற்றத்திற்கான வழி மட்டும் கானல் நீராக, தொலை தூரக் கனவாகப்  மறைந்து  விடுகிறது. இது பொதுவான நிலைபாடு எனினும் கிறிஸ்தவம் ஜாதி பேதங்கள் குறித்து என்ன சொல்லுகிறது. கிறிஸ்தவர்கள் இந்தக்கருத்தில் என்ன நிலைப்பாடு எடுக்கிறார்கள் என்ற ஒரு கேள்வி வரும்போது அவர்களும் ஜாதி பாகுபாட்டை ஆதரிக்கிறவர்களாகவும், வரவேற்கிறவார்களாகவும் இருப்பது கவலையளிக்கிறதாக இருக்கிறது. இந்த ஐயத்திற்கான  காரணம் கிறிஸ்தவ மார்க்கம் ஜாதிப் பாகுபாட்டை ஆதரிக்கவில்லை மாறாக எதிர்க்கிறது என்பது தான் உண்மை. இந்த உண்மையை நாம் புரிந்துக்கொள்ள வேண்டுமானால் கிறிஸ்தவ மார்க்கத்தை நாம் சற்று புரட்டி பார்க்க வேண்டும் அல்லது ஆழ ஊடுருவிப் பார்ப்பது அவசியம். கிறிஸ்தவத்திற்கு அடிப்படை இயேசு கிறிஸ்து என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இயேசு கிறிஸ்து ஒரு யூதர் என்பதும் அனைவரும் அறிந்தது தான், என்றாலும் இயேசு கிறிஸ்து யூத மார்க்கத்தையும் அதன் அடிப்படைகளையும் எதிர்ப்பவராகவே இருந்தார், இதற்கு முக்கிய காரணம் அவர்களின் மாறுப்பாடான சித்தாந்தம். இதற்காகத் தான் யூதர்கள் இயேசு கிறிஸ்துவை வெறுத்தார்கள், காட்டிக்கொடுத்தார்கள், சிலுவையிலும் அறைந்தார்கள் என்பது வரலாறு. 

ஆனால் இந்த உண்மையை உணராத பலர் இயேசு கிறிஸ்து ஒரு யூதர் என்று சொல்லி ஜாதி பாகுப்பாட்டை ஆதரிக்கும் ஒரு கூட்டம் கிறிஸ்தவத்திற்குள்ளும் இருப்பது வேதனைக்குரிய விஷயம்.  தேவனாகிய கர்த்தர் ஆதியிலே பக்தியுள்ள ஜனக்கூட்டத்தை உருவாக்க விரும்பினார். அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே; பின்னை ஏன் ஒருவனைப்படைத்தார்? தேவபக்தியுள்ள, சந்ததியைப் பெறும்படி தானே. மல்கியா : 2 : 15.  அதற்காக மனுஷனை பூமியிலே உருவாக்கினார். "நான் பூமியை உண்டுபண்ணி, நானே அதின்மேல் இருக்கிற மனுஷனைச் சிருஷ்டித்தேன்; என் கரங்கள் வானங்களை விரித்தன; அவைகளின் சர்வசேனையையும் நான் கட்டளையிட்டேன்". ஏசாயா : 45 : 12. ஆனால் ஆதி மனுஷனாகிய ஆதாம் விழுந்துப்போனான் தனக்கு துணையாகக் கொடுத்த ஏவாளினால், இங்கே தேவ திட்டம் தடைப்பட்டது. தேவனாகிய கர்த்தர் தொடர்ந்து நோவாவை தெரிந்துக்கொண்டு அவன் மூலமாக தேவ பக்தியுள்ள சந்ததியை பெற்றெடுக்க விரும்பினார். அதற்காக உலக முழுவதும் மிகப்பெரிய பிரளயத்தால் அழிக்கப்பட்டப் போதும் தேவன் நோவாவையும் அவன் குடும்பத்தை மாத்திர பிரளயத்திலிருந்து அவர்களை காப்பாற்ற நோவாவைக் கொண்டு ஒரு பேழையை செய்யச்சொல்லி, அவர்களை பாதுகாத்தார். பிரளயத்திற்குப் பிறகு நோவாவின் குடும்பத்தால் உலத்தை நிரப்பினார். "பின்பு தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் ஆசீர்வதித்து: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள். உங்களைப்பற்றிய பயமும் அச்சமும் பூமியிலுள்ள சகல மிருகங்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும் உண்டாயிருக்கும்; பூமியிலே நடமாடுகிற யாவும், சமுத்திரத்தின் மச்சங்கள் யாவும், உங்களுக்குக் கையளிக்கப்பட்டன". ஆதியாகமம் : 9 : 1 - 2.

பாருங்கள், நோவா தேவனோடு சஞ்சரிக்கிறவானாக பக்தியுள்ள மனுஷனாக வாழ்ந்து வந்தான். நோவாவின் வம்சவரலாறு: நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான். ஆதியாகமம் : 6 : 9. ஆனால் பிரளயத்திற்குப் பின் தொடர்ந்து நோவாவினால் அப்படியே வாழமுடியாமல் போனது. இது நோவாவின் காலத்திலேயே தொடங்கினதாக பரிசுத்த வேதாகமம் பதிவுச் செய்கிறது. நோவா பயிரிடுகிறவனாகி, திராட்சத் தோட்டத்தை நாட்டினான். அவன் திராட்சரசத்தைக் குடித்து, வெறிகொண்டு, தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகிப் படுத்திருந்தான். ஆதியாகமம் : 9 : 20 - 21. ஆக நோவாவினால் தொடர்ந்து தன் உத்தமத்தில் வாழ முடியாமல் விழுந்துப் போனான். ஆனால் தேவனோ பக்தியுள்ள சந்ததியை உருவாக்க ஒரு மனுஷனை தேடிக்கொண்டே இருந்தார். இப்பொழுதும் அப்படியே தேடிக்கொண்டுமிருக்கிறார். அவ்வாறு தேடும் போது கண்டெடுக்கப்பட்டவன் தான் ஆபிரகாம். இந்த ஆபிரகாம் தன் ஜென்ம பூமியாகிய ஊர் என்னும் கல்தேயர் தேசத்துப் பட்டணத்தை சேர்ந்தவன். அது இன்றைய ஈராக் தேசம். ஆபிரகாம் யூதனுமல்ல, அவன் கானான் தேசத்தானுமல்ல. இது பரிசுத்த வேதாகமம் சொல்லும் சரித்திரம். ஆனால் யூதக் குலம் ஆபிரகாமிற்குப் பின் வந்த சந்ததியினரை அவ்வாறு மக்கள் அழைத்தார்கள். அதேப் போல இன்றைய கானான் தேசம் தேவனால் ஆபிரகாமுக்கு வாக்களிக்கப்பட்டு பின்னாளில் ஆபிரகாமின் சந்ததியினருக்கு கொடுக்கப்பட்டது தான் இன்றைய இஸ்ரவேல் என்னும் பாலும் தேனும் ஓடுகிறதான நல்ல தேசம். 

சூரியன் அஸ்தமிக்கும்போது, ஆபிராமுக்கு அயர்ந்த நித்திரை வந்தது; திகிலும் காரிருளும் அவனை மூடிக்கொண்டது.அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியக்கடவாய். இவர்கள் சேவிக்கும் ஜாதிகளை நான் நியாயந்தீர்ப்பேன்; பின்பு மிகுந்த பொருள்களுடனே புறப்பட்டு வருவார்கள்.நீ சமாதானத்தோடே உன் பிதாக்களிடத்தில் சேருவாய்; நல்ல முதிர்வயதிலே அடக்கம்பண்ணப்படுவாய். நாலாம் தலைமுறையிலே அவர்கள் இவ்விடத்துக்குத் திரும்ப வருவார்கள்; ஏனென்றால் எமோரியருடைய அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை என்றார். சூரியன் அஸ்தமித்து காரிருள் உண்டான பின்பு, இதோ, புகைகிற சூளையும், அந்தத் துண்டங்களின் நடுவே கடந்து போகிற அக்கினி ஜுவாலையும் தோன்றின. அந்நாளிலே கர்த்தர் ஆபிராமோடே உடன்படிக்கைபண்ணி, எகிப்தின் நதிதுவக்கி ஐபிராத்து நதி என்னும் பெரிய நதிமட்டுமுள்ளதும் கேனியரும், கெனிசியரும், கத்மோனியரும்,ஏத்தியரும், பெரிசியரும், ரெப்பாயீமியரும், எமோரியரும், கானானியரும், கிர்காசியரும், எபூசியரும் என்பவர்கள் இருக்கிறதுமான இந்தத் தேசத்தை உன் சந்ததிக்குக் கொடுத்தேன் என்றார். ஆதியாகமம் : 15 : 12 - 21. அதேப் போல இயேசு கிறிஸ்துவின் உபதேசத்தைப் பெற்று சுவிஷேத்தை உலகின் பெரும் பகுதிகளுக்கு சென்று இயேசு கிறிஸ்துவின் அன்பை விதைத்த அப்போஸ்தலனாகிய பவுல் கலாத்தியருக்கு எழுதின நிரூபத்தில், நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப் பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே. ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனை பேரும் கிறிஸ்துவைத் தரித்துக் கொண்டீர்களே. யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள். நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயுமிருக்கிறீர்கள். கலாத்தியர் :3 : 26 - 29. 

இப்படிப் பட்ட தெளிவான போதனைகளை பெற்று கிறிஸ்துவை பின் பற்றுகிற நாம் உலகத்திற்கு முன்மாதிரியாக வாழாமல், உலத்தை போலவே ஒத்த வேஷம் தரித்தவர்களாய் வாழ்வது எத்துணை அநீதி, கேவலம் என்பதை கிறிஸ்தவர்களாகிய நாம் உணரவேண்டும். அவ்வாறே கிறிஸ்துவை உலகிற்கு அவருடைய அன்பை வெளிப்படுத்த வேண்டிய நாம் சபைக்குள் ஜாதி பாகுபாட்டை வைத்துக் கொண்டு நாடார், பிராமினர், முதலியார், கவுண்டர், வன்னியர், பறையர் என்று திருச்சபைகளை வகுத்துக்கொண்டு வாழ்வது தான் கிறிஸ்தவமா என்று கேட்டக்கத்தோன்றுகிறது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்காகவும், நமது மிறுதல்களுக்காகவும் ஒரே தரம் சிலுவையில் தமது தூய இரத்தத்தை சிந்தி நம் அனைவரையும் மீட்டுக்கொண்டார். ஆனால் இன்னும் எத்தனை முறை அவ்வாறு நமக்காக ஈனச் சிலுவையை சுமக்கவேண்டும் என்று நாம் எத்தனிப்போம். சமீபத்தில் CSI Christ Church, Kovai யின் அழைப்பிதழ் ஒன்றை சமூக வலைத்தளத்தில் கண்டேன். அதில் 1-5-22 அன்று கட்டிடத் திறப்பு முதலாம் ஆண்டு நிறைவு மற்றும் பிரேயர் ஹால் திறப்பு என்று போடப்பட்டிருந்தது, நிகழ்ச்சியில் பேராயர் RT Rev. திமோத்தி ரவீந்தர் மற்றும் பேராயரம்மா. ஆனி ஹேமலதா ஆகியோர் முன்னிலை என்று போடப்பட்டிருந்தது. எல்லாம் சரி தான், ஆனால் ஜாதி பெருமையை சாகடிக்காமல் எத்தனை கட்டடங்கள் கட்டி என்ன? எத்தனை ஜெப அறைகள் திறந்து என்ன பயன். இதை உணராத திருச்சபைகள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு இழுக்கையும், அவமானத்தையும் அல்லவா தேடித்தருகின்றன. எத்துணை பெரிய ஊழியத்தை செய்தாலும், எத்துணை பெரிய ஊழியராக இருந்தாலும் ஒரு பயனுமில்லை. என்னுடைய வீடு எல்லா ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கவில்லையா? நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள் என்று அவர்களுக்குச் சொல்லி உபதேசித்தார். மாற்கு : 11 ; 17.

நாமும் நமது ஆண்டவருக்கான ஊழியங்களும், மற்றும் பல சேவைகளும் எல்லாருக்குமானது என்று உணராத வரையில் நம்மால் ஆண்டவருக்கு மகிமையை சேர்க்க முடியாது. நாம் நமக்கு பேர் உண்டாகவா ஊழியம் செய்கிறோம். கிறிஸ்துவம் என்பது எல்லோருக்கும்மானது, இன்னும் குறிப்பாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவானவர் எல்லருக்குமானவர், ஆகவே தான் அவரிடத்தில் எந்த பேதமும், பாகுபாடுமில்லை. எல்லோரும் ஆண்டவருக்குள் ஒன்றாகவே இருக்கிறோம். வெறும் வார்த்தையில் அன்புக் கூறுவதல்ல கிறிஸ்துவ ஜீவியம், அவ்வாறே செய்கையிலும் காண்பிப்பது தான் கிறிஸ்துவை நாம் நமது வாழ்வில் பிரதிபலிக்க வேண்டும். பேருக்கும் புகழுக்கும் வாழ்வது வாழ்க்கையாகாது. நமது செய்கைகள் இயேசு கிறிஸ்துவுக்கு மகிமையையும் மகத்துவத்தையும் கொண்டு வரவேண்டும் என்பது தான் திருச் சபைகளின் நோக்கம். ஆனால் திருச் சபைகளோ ஜாதியை  முன்னிறுத்துமானால் முடிவு அழிவு என்பதை நாம் அனைவரும் அறிய வேண்டும். அந்த அழைப்பிதழில் Admin. Secretary, Finance Administrator, தலைமை ஆயர், உதவி ஆயர்கள், ஆலைய செயலர், பொருளர், பில்டிங் கமிட்டி கன்வீனர் மற்றும் DC, PC மெம்பர்கள் என்று ஏராளமானவர்கள் இருந்தும் இத்துணை பெரிய தவறு நடக்கிறது என்றால் ஒருவருக்கும் உணர்வு இல்லை என்றே பொருள். சமூதாய மீட்பிற்காக தேவன் திருச்சபைகளை நமக்கு தந்திருக்கிறார். திருச் சபையின் கடமையையும், பொறுப்பையும் நாம் தவற விடுவோமானால் அதற்கான ஆக்கினை தீர்ப்பு வரும் என்பதை நாம் நிச்சயமாக அறிந்திருப்பது நல்லது. சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத் தக்க வேறொருபலி இனியிராமல்,நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும். எபிரெயர்: 10 : 26 – 27. இந்தியா தேசமோ, இந்தியாவின் எந்த ஒரு மாநிலமோ, அம்மாநிலத்திலுள்ள மாவட்டமோ, தாலுக்காவோ, நகரமோ, கிராமமோ இந்த பாகுபாட்டில் மாறாமல் இருக்குமானால் அதற்கு கிறிஸ்துவை உடையவர்களாகிய நாமே பொறுப்பு. தேசம் அழிவின் பாதையில் பயணிக்கிறது என்றால் அதற்கும் நாமே பொறுப்பாளிகள் என்பதை உணர்வோம்.   

சகோதர சகோதரிகளே நாம் நம் அழைப்பில் உறுதியாய் இருப்போம்! சாட்சியாய் நிற்ப்போம்!! தேவன் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக, ஆமென்.

 

சுவி. பாபு T தாமஸ், நமது மேய்ப்பரின் குரல் ஊழியங்கள், இராணிப்பேட்டை.

  

  

 

 

Saturday, November 11, 2023

Obey My Commandments - என் கட்டளைகளுக்கு கீழ்படியுங்கள் - Evg.Babu T Tho...

பத்துக் கற்பனைகள்!

 கடவுள் திருவுளம்பற்றிச் சொல்லிய வார்த்தைகள் 

1. உன் தேவனாகிய கர்த்தர் நானே. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம். 

கர்த்தாவே, எங்களுக்கு இரங்கி, இந்தப் பிரமணத்தைக் கைக்கொள்ள எங்கள் இருதயத்தை ஏவியருளும்.

2. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும், யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம். நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம். 

கர்த்தாவே, எங்களுக்கு இரங்கி, இந்த பிரமாணத்தைக் கைக்கொள்ள எங்கள் இருதயத்தை ஏவியருளும். 

3. உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக.

கர்த்தாவே, எங்களுக்கு இரங்கி, இந்த பிரமாணத்தைக் கைக்கொள்ள எங்கள் இருதயத்தை ஏவியருளும்.

4. ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக. ஆறுநாளும் நீ வேலை செய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக. ஈழயம் நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வு நாள்.

கர்த்தாவே, எங்களுக்கு இரங்கி, இந்தப் பிரமாணத்தைக் கைக்கொள்ள எங்கள் இருதயத்தை ஏவியருளும்.

5.உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக.

கர்த்தாவே, எங்களுக்கு இரங்கி, இந்த பிரமாணத்தைக் கைக்கொள்ள எங்கள் இருதயத்தை ஏவியருளும்.

6. கொலை செய்யாதிருப்பாயாக. 

கர்த்தாவே, எங்களுக்கு இரங்கி, இந்தப் பிரமாணத்தைக் கைக்கொள்ள எங்கள் இருதயத்தை ஏவியருளும். 

7. விபச்சாரம் செய்யாதிருப்பாயாக.  

கர்த்தாவே, எங்களுக்கு இரங்கி, இந்தப் பிரமணத்தைக் கைக்கொள்ள எங்கள் இருதயத்தை ஏவியருளும்.

8. களவு செய்யாதிருப்பாயாக. 

கர்த்தாவே, எங்களுக்கு இரங்கி, இந்தப் பிரமாணத்தைக் கைக்கொள்ள எங்கள் இருதயத்தை ஏவியருளும். 

9. பொய்ச் சாட்சி சொல்லாதிருப்பாயாக. 

கர்த்தாவே, எங்களுக்கு இரங்கி, இந்தப் பிரமாணத்தைக் கைக்கொள்ள எங்கள் இருதயத்தை ஏவியருளும். 

10. இச்சியாதிருப்பாயாக. 

கர்த்தாவே, எங்களுக்கு இரங்கி, இந்தப் பிரமாணங்கள் எல்லாவற்றையும்   எங்கள் இருதயத்தில் பதித்தருள வேண்டும்மென்று வேண்டிக்கொள்ளுகிறோம்.  

Mission - தூதுப்பணி - Evg.Babu T Thomas, Our Shepherd's Voice Foundation...

Thursday, November 9, 2023

Sin is Couching - பாவம் படுத்திருக்கும் - Evg.Babu T Thomas - Our Shephe...

Selfgiving Love - தன்னையே தரும் அன்பு - Evg.Babu T Thomas, Our Shepherd'...

Say Yes to yes - உள்ளதை உள்ளதென்று சொல் - Evg.Babu T Thomas - Our Shephe...

Anointing - அபிஷேகம் - Evg.Babu T Thomas, Our Shepherd's Voice Foundatio...

நிசேயா விசுவாசப் பிரமாணம்!

 நிசேயா விசுவாசப் பிரமாணம்!

வானத்தையும் பூமியையும், காணப்படுகிறதும், காணப்படாததுமான

எல்லாவற்றையும் படைத்தவராயிருக்கிற, சர்வ வல்லமையுள்ள 

பிதாவாகிய ஒரே தேவனை விசுவாசிக்கிறேன். ஒரே கர்த்தருமாய், 

 தேவனுடைய ஒரே பேறான குமரனுமாயிருக்கிற, இயேசு 

கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறேன். அவர் சகல உலகங்களும் 

உண்டாவதற்கு முன்னே, தமது பிதாவினாலே ஜெநிப்பிக்கப் பட்டவர். 

தெய்வத்தில் தெய்வமானவர், ஜோதியில் ஜோதியானவர்,  மெய்த் 

தேவனில் மெய்த் தேவனானவர், உண்டாக்கப் படாமல் 

ஜெநிப்பிக்கப்பட்டவர், பிதாவோடே ஒரே தன்மையுடையவர், 

சகலத்தையும் உண்டாக்கினவர். மனிதராகிய நமக்காகவும், நமக்கு 

இரட்சிப்பு உண்டாகவும், பரமண்டலத்திலிருந்து இறங்கிப் பரிசுத்த 

ஆவியினாலே, கன்னிமரியாளிடத்தில் அவதரித்து, மனிதனானார். 

நமக்காகப் பொந்தியுபிலாத்துவின் காலத்தில், சிலுவையில் 

அறையுண்டு, பாடு பட்டு, அடக்கம்பண்ணப்பட்டார், வேத 

வாக்கியங்களின்படி, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். 

பரமண்டலத்துக்கேறி, பிதாவின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார். 

உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்க, 

மகிமையோடே திரும்ப வருவார். அவருடைய ராஜ்யத்துக்கு முடிவில்லை. 

கர்த்தருமாய், ஜீவனைக் கொடுக்கிறவருமாய், பிதாவிலும் குமாரனிலும் 

நின்று புறப்படுகிறவருமாய், பிதாவோடும் குமாரனோடும் கூடத் தொழுது 

தோத்திரிக்கப்படுகிறவருமாய், தீர்க்கதரிசிகள் மூலமாக உரைத்தவரு

மாயிருக்கிற பரிசுத்த ஆவியையும் விசுவாசிக்கிறேன். ஒரே பரிசுத்த 

பொதுவான அப்போஸ்தலத் திருசபை உண்டென்று விசுவாசிக்கிறேன். 

பாவமன்னிப்புக்கென்று நியமிக்கப்பட்ட ஒரே ஞானஸ்நானத்தை 

அறிக்கையிடுகிறேன். மரித்தோர் உயிர்த்தெழுதலும், மறுமைக்குரிய 

ஜீவனும் உண்டாகுமென்று காத்திருக்கிறேன், ஆமென்.           

      

Israel - இஸ்ரவேல் - Evg.Babu T Thomas, Our Shepherd's Voice Foundation- ...

Beer-la'hai-roi - லகாய்ரோயீ - Evg.Babu T Thomas - Our Shepherd's Voice F...

அப்போஸ்தலர் விசுவாசப் பிரமாணம்!

 

விசுவாச அறிக்கை!

வானத்தையும் பூமியையும் படைத்த  சர்வ வல்லமையுள்ள 

பிதாவாகிய தேவனை விசுவாசிக்கிறேன். 

அவருடைய ஒரே குமாரனாகிய நம்முடைய நாதர் 

இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறேன். 

அவர் பரிசுத்த ஆவியினாலே கன்னிமரியாளிடத்தில் 

உற்பவித்துப் பிறந்தார். 

பொந்தியு பிலாத்துவின் காலத்தில் பாடுபட்டு, சிலுவையில் 

அறையுண்டு, மரித்து அடக்கம் பண்ணப்பட்டு பாதாளத்தில் இறங்கினார்.

மூன்றாம் நாள் மரித்தோரிடத்திலிருந்து எழுந்தருளினார். 

பரமண்டலத்துக்கேறி சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய 

தேவனுடைய வலதுபாரிசத்திலே  வீற்றிருக்கிறார். 

அவ்விடத்திலிருந்து உயிருள்ளோரையும், மரித்தோரையும் 

நியாயந்தீர்க்க வருவார். 

பரிசுத்த ஆவியையும் விசுவாசிக்கிறேன். 

பொதுவாயிருக்கிற பரிசுத்த சபையும், பரிசுத்தவான்களுடைய 

ஐக்கியமும், பாவமன்னிப்பும், சரீரம் உயிர்த்தெழுதலும்,

நித்திய ஜீவனும் உண்டென்று விசுவாசிக்கிறேன், ஆமென்.      

  

Perish - அழிவு - Evg.Babu T Thomas, Our Shepherd's Voice Foundation - Ra...

பரமண்டல ஜெபம்!



ஆண்டவர் சொல்லித்தந்த ஜெபம்!

***************
பரமண்டலங்களில் இருக்கும் எங்கள் பிதாவே,
உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. 
உம்முடைய ராஜ்யம் வருவதாக, 
உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது 
போலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக.  
எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். 
எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறது போல, 
எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். 
எங்களைச் சோதனைக்குட் படப்பண்ணாமல், 
தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும், 
ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் 
உம்முடையவைகளே, ஆமென். 



Lord's Prayer!
********

Our Father who art in heaven,
Hallowed be thy name.
Thy kingdom come,
Thy will be done, on earth as it is in heaven.
Give us this day our daily bread.
And forgive us our debts, as we also have forgiven our debtors.
And lead us not into temptation, 
But deliver us from evil.
For thine is the kingdom, and the glory,
forever, Amen.   


Wednesday, November 8, 2023

ஸ்தோத்திர பலிகள் ஆயிரம்! 981 - 1000

981. நான் உன்னை விட்டு விலகுவதில்லை, உன்னை என்றும் கைவிடுகிறதில்லை என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

982. நிச்சயமாக முடிவு உண்டு, உன் நம்பிக்கை வீண் போகாது என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

983. கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார், நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம் 

984. இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

985. யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதமில்லை, இஸ்ரவேலுக்கு விரோதமான குறிச் சொல்லுதலுமில்லை என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம் 

986. ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ, அவர்கள் மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

987. இதோ என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன, உன் மதில்கள் எப்பொழுதும் என் முன் இருக்கிறது என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

988. நான் உனக்கு முன்னே போய் கோணலானவைகளை செவ்வையாக்குவேன் என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம் 

989. நீ தண்ணீர்களை கடக்கும் போது நான் உன்னுடன் இருப்பேன் என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம் 

990 நீ ஆறுகளை கடக்கும் போது அவைகள் உன் மேல் புரளுவதில்லை என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

991. நீ அக்கினியில் நடக்கும் போது வேகாதிருப்பாய், அக்கினி ஜீவாலை உன் பேரில் பற்றாது என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

992. நீ அநேக ஜாதிகளுக்கு கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்குவதில்லை என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

993. கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய் என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம் 

994. நான் கர்த்தர், எனக்கு காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

995. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப் படுவீர்கள் என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம் 

996. நித்திய ஜீவனை அளிப்பேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

997. நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து உன்னை பெருகவே பெருகப் பண்ணுவேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

998. ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப் போகிறேன், ஆயத்தம் பண்ணின பின்பு, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக் கொள்ளுவேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

999. சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன் என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம் 

1000. இதோ, சீக்கிரமாக வருகிறேன் என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம்      

        

ஸ்தோத்திர பலிகள் ஆயிரம்! 961 - 980

961. உன்னோடு வழக்காடுகிறவர்களோடு நான் வழக்காடி உன் பிள்ளைகளை இரட்சித்துக் கொள்ளுவேன் என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம் 

962. உன் பிள்ளைகள் எல்லோரும் கர்த்தரால் ஆசீர்வதிக்கப் பட்டிருப்பார்கள், உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாய் இருக்கும் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

963. மலைகள் விலகினாலும், பர்வதந்தங்கள் நிலைப் பெயர்ந்தாலும், என் கிருபை உன்னை விட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைப் பெயராமலும் இருக்கும் என்று உன் மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார் என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம் 

964. என் கிருபை உனக்கு போதும், உன் பெலவீனத்திலே என் பெலன் பூரணமாக விளங்கும் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

965. இரட்டிப்பான நன்மையை தருவேன், அதை இன்றைக்கே தருவேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

966. சிங்கக் குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும், கர்த்தரை தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறைவுப்படாது என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம் 

967. நான் உனக்குப் போதித்து நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன், உன் மேல் என் கண்ணை வைத்து உனக்கு ஆலோசனைச் சொல்லுவேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

968. ஆபத்துக் காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு, நான் உன்னை விடுவிப்பேன் நீ என்னை மகிமைப்படுத்துவாய் என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம் 

969. என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

970. கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

971. தேடுங்கள், அப்பொழுது கண்டடை வீர்கள் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

972. தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

973. இரண்டுப் பேராவது, மூன்றுப் பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவில் இருக்கிறேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

974. இதோ, உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் உங்களோடுக் கூட இருக்கிறேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

975. நீ பயப்படாதே நான் உன்னோடு இருக்கிறேன், திகையாதே நான் உன் தேவன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

976. நான் உன்னை பலப்படுத்தி உனக்கு சகாயம் பண்ணுவேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

977. என் நீதியின் வலக்கரத்தினால் உன்னை தாங்குவேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

978. உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாக இருந்தால், யாவருக்கும் சம்பூரணமாக கொடுக்கிறவரும் ஒருவனையும் கடிந்துக் கொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன் அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

979. பயப்படாதே, நான் உனக்குத் துணை நிற்கிறேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

980. நீ உயிரோடு இருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்            

Tuesday, November 7, 2023

ஸ்தோத்திர பலிகள் ஆயிரம்! 941 - 960

941. அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் தப்புவிப்பார் என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம் 

942. தமது சிறகுகளால் உன்னை மூடுவார் என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம் 

943. அவர் செட்டைகளின் கீழ் அடைக்கலம் புகுவாய், அவர் சத்தியம் உனக்கு பரிசையும், கேடகமுமாகும் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

944. இரவில் உண்டாகும் பயங்கரத்திற்கும், பகலில் பறக்கும் அம்புக்கும், இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும், மத்தியானத்தில் பாழக்கும் சங்காரத்திற்கும் பயப்படாதிருப்பாய் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

945. உன் பக்கத்தில் ஆயிரம் பேரும், உன் வலது பக்கத்தில் பதினாயிரம் பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

946. பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம் 

947. உன் வழிகளிளெல்லாம் உன்னை காக்கும்படிக்கு, உனக்காய் தம்முடைய தூதர்களுக்கு கட்டளையிடுவார் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

948. உன் பாதம் கல்லில் இடறாதப்படிக்கு தம்முடைய தூதர்கள் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

949. சிங்கத்தின் மேலும் விரீயன் பாம்பின் மேலும் நீ நடந்து, பால சிங்கத்தையும், வலுசர்பத்தையும் நீ மிதித்துப் போடுவாய் என்ற வாக்குதத்தத் திற்காக ஸ்தோத்திரம் 

950. என்னிடத்தில் ஆர்வமாய் இருக்கிறவனை விடுவிப்பேன், என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறப்படியால் அவனை உயர்ந்த அடைக்கலத்தில் வைப்பேன் என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம் 

951. என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச் செய்வேன், ஆபத்தில் நானே அவனோடு இருந்து அவனை தப்புவித்து கனப்படுத்துவேன் என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம் 

952. நீடித்த நாட்களால் அவனை திருப்தியாக்கி என் இரட்சிப்பை அவனுக்கு காட்டுவேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

953. கர்த்தர் தம்முடைய ஜனத்தை நெகிழவிடாமலும், தம்முடைய சுதந்திரத்தை கைவிடாமலும் இருப்பார் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

954. உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய் என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம் 

955. உனக்கு பாக்கியமும், நன்மையும் உண்டாயிருக்கும் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

956. உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனி தரும் திராட்சைக் கொடியை போல் இருப்பாள் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

957. உன் பிள்ளைகள் உன் பந்தியை சுற்றிலும் ஒலிவ மரக் கன்றுகளைப் போல் இருப்பார்கள் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

958. கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார், நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வை காண்பாய் என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம் 

959. உன் பிள்ளைகளின் பிள்ளைகளைக்  காண்பாய் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 

960. உன் சந்ததி மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின் மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன் என்ற வாக்குதத்தத்திற்காக ஸ்தோத்திரம்               

ஸ்தோத்திர பலிகள் ஆயிரம்! 921 - 940

921. காடுகளுக்காக, குகைகளுக்காக, நிலத்தடிக்கனிமங்களுக்காக, எண்ணைய்  ஊற்றுக்களுக்காக, எரிவாயு ஊற்றுக்களுக்காக ஸ்தோத்திரம் 

922. தண்ணீரை திராட்சரசமாக மாற்றினீர் ஸ்தோத்திரம்

923. பிறவிக் குருடர், செவிடர், ஊமையானவர்களை காணவும், கேட்கவும், பேசவும் வைத்தீர் ஸ்தோத்திரம் 

924. மூடர், சப்பாணிகள், கூனர், சூம்பின உறுப்புடையோர், திமிர்வாதக்காரர் அனைவரையும் சுகமாக்கினீர் ஸ்தோத்திரம் 

925. பிசாசின் வல்லமையில் பிடிப்பட்டோரை விடுதலையாக்கினீர் ஸ்தோத்திரம் 

926. குஷ்டரோகிகளை சுத்தமாக்கினீர் ஸ்தோத்திரம் 

927. மரித்த லாசரு, யாவீரின் மகள், நாயீன் ஊர் விதவையின் மகன் யாவரையும் உயிரோடு எழுப்பினீர் ஸ்தோத்திரம் 

928. காற்றையும் கடலையும் அமர்த்தினீர் ஸ்தோத்திரம் 

929. கடலின் மேல் நடந்தீர் ஸ்தோத்திரம் 

930. உமது வார்த்தையின்படி ஆழத்திலே வலை போட்டப் போது திரளான  மீன்களும், வலப்பக்கத்திலே வலைப் போட்டப் போது 153 பெரிய மீன்களும் பிடிக்கச் செய்த அற்புதத்திற்காக ஸ்தோத்திரம்

931. வரிக்கான பணம் மீன் வாயில் கிடைக்கச் செய்தீர் ஸ்தோத்திரம் 

932. பெரும்பாடுள்ள ஸ்திரீயையும், பேதுருவின் மாமியையும், 38 வருஷமாய் வியாதியாய் இருந்த மனுஷனையும் குணமாக்கினீர் ஸ்தோத்திரம் 

933. ஐந்து அப்பம் இரண்டு மீன்கள் கொண்டு ஐயாயிரம் பேர்களுக்கும் அதிகமானவர்களை போஷித்து திருப்தியாக்கி, மீதியானதை பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுக்கச் செய்தீர் ஸ்தோத்திரம் 

934. ஏழு அப்பம் மற்றும் சில சிறு மீன்களைக் கொண்டு நாலாயிரம் பேர்களுக்கும் அதிகமானவர்களை போஷித்து மீதியானதை ஏழு கூடை நிறைய எடுக்கச் செய்தீர் ஸ்தோத்திரம் 

935. மல்குஸின் வெட்டப்பட்ட காதை ஓட்ட வைத்தீர் ஸ்தோத்திரம் 

936. உம்மை கொல்ல நினைத்த மக்களிடமிருந்து நீர் அற்புதமாய் மறைந்துப் போனீர் ஸ்தோத்திரம் 

937. உம்மை பிடிக்க வந்த போர் சேவகர்களின் கூட்டத்தை பின்னிட்டு விழச் செய்தீர் ஸ்தோத்திரம் 

938. சந்திர ரோகியையும், நீர்க்கோவை வியாதியுள்ளவனையும் குணமாக்கினீர் ஸ்தோத்திரம் 

939. அத்தி மரம் உமது சாபத்தால் உடனே பட்டுப் போனது ஸ்தோத்திரம் 

940. மனிதனின் பாவ இருதயத்தை உம்முடைய பரிசுத்த இரத்தத்தினால் கழுவி அவனை புதிய சிருஷ்டியாக மாற்றும் மகத்தான உம் அற்புதத்திற்காக ஸ்தோத்திரம்